ஆன்லைனில் தமிழ் டைப் செய்யுங்கள்

Sunday 16 March 2014

இங்க இல்லையே

அன்புச்செல்வியின் வீட்டிற்கு திருமண கலை வந்துவிட்டது. ஆனால் மாப்பிள்ளை வீட்டார் ரொம்ப கராரானவர்கள்.
ஏற்கனவே அவர்கள் கேட்ட ரொக்க பணம் ஐந்து லட்சம் ரூபாய்க்காக வீட்டை விற்றுவிட்டார் அன்புச்செல்வியின் தந்தை கண்ணன்.
“இன்னும் இவங்க என்னவெல்லாம் கேட்கப் போறாங்களோ? வீட்டை வித்தாச்சு, ஏற்கனவே சேத்துவெச்ச 20 பவுன் நகையும் போதாது, அவங்க 50 பவுன் கேக்கறாங்க” தன்னுடைய கண்ணாடியை கலற்றி வைத்துவிட்டு யோசித்தார் கண்ணன்.
“நம்ம பொண்ணுக்கு வேற வரனே கிடைக்காதா? நீங்க நல்லா விசாரிச்சீங்களா?” என்றார் கண்ணனின் மனைவி விசாலாட்சி.
“ஏற்கனவே நம்ம பொண்ணுக்கு வயசு ஏறிக்கிட்டே போகுது, மாப்பிள்ளையும் நல்ல சாப்ட்வேர் நிறுவனத்தில பணிசெய்யறாரு, இனிமே மாப்பிள்ளை தேடி கிடைக்கலைனா ரொம்ப கஷ்டமா போயிடும்”
“நீங்க ஒன்னும் கவலைபடாதீங்க அப்பா, கல்யாணம் நல்லடியா முடியட்டும், அது அப்புறமா நான் அவங்க எல்லாரையும் ஒரு கை பாத்துக்குறேன் !” என்று தன்னுடைய ஆதங்கத்தை கொட்டிவிட்டு அன்புச்செல்வி கடைக்கு சாமான்கள் வாங்கச் சென்றாள்.
அவசரத்தில் செல்போனை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டாள்.
அப்போது அன்புச்செல்வியின் சிநேகிதி அவளை செல்போனில் அழைத்தாள்.
அதை அவளுடைய அப்பா கண்ணன் எடுத்து “அன்பு இங்க இல்லையே !” என்றார்.
அவர் சொன்னது உண்மைதானே !

 - ஜெயசீலன் சாமுவேல்