ஆன்லைனில் தமிழ் டைப் செய்யுங்கள்

Sunday 17 September 2017

அந்நிய பாஷை அவசியமா?


விசுவாசி:அந்நிய பாஷையில் பேசுவது அவசியமா?

பாஸ்டர்: ஆம், விசுவாசிகள் கண்டிப்பாக அந்நிய பாஷையில் பேச வேண்டும்.

விசுவாசி:அப்படியா பாஸ்டர், வேதவசன ஆதாரங்கள் ஏதாவது இருக்கா?

பாஸ்டர் : நிச்சயமா, மாற்கு 16:17,18. தன்னை விசுவாசிக்கிறவர்கள் நவமான (புதிய) பாஷைகளை பேசுவார்கள்னு இருக்கே

விசுவாசி:அப்படினா 1 கொரிந்தியர் 14:22 அந்நிய பாஷை அவிசுவாசிகளுக்கான அடையாளம்னு சொல்லுதே

பாஸ்டர் : நீங்க எல்லாத்தையுமே விதண்டாவாதமா பாக்குறீங்க, வசனத்தை வளைத்து உங்களுக்கேற்ற அர்த்தத்தை கொடுக்குறீங்க, 1 கொரி 14ல இருக்கிறது மனிதர்களுக்கான மொழி, அதாவது சீன மொழி, இந்தி மொழி போன்றது, மாற்கு 16ல் இருப்பது தூதர்களின் மொழி

விசுவாசி:அப்படீன்னா எதுக்காக இந்த அந்நிய பாஷை ?

பாஸ்டர் : அது கடவுளோடு பேசும் பாஷை, தூதர்களின் பாஷை, அது சாத்தானுக்கு புரியாது

விசுவாசி:சாத்தான் யாரு பாஸ்டர்?

பாஸ்டர் : வானத்தில் இருந்து விழுந்த தூதன்

விசுவாசி:தூதனுக்கு தூதர் பாஷை புரியாதா?

பாஸ்டர் : 1 கொரிந்திய 14:2 தெளிவா சொல்லுது அது கடவுளோடு பேசும் ரகசிய மொழி என்று

விசுவாசி:சரி அப்டியே இருக்கட்டும், 1 கொரிந்தியர் 14: 13, 14, அந்நிய பாஷையில் ஒருவர் பேசினால் அதன் அர்த்தத்தை சபையாருக்கு புரியும்படி எடுத்து உரைக்க வேண்டும்னு சொல்லுதே, அப்படினா, சாத்தான் அதை ஒளிந்திருந்து கேட்டுவிட மாட்டானா?