ஆன்லைனில் தமிழ் டைப் செய்யுங்கள்

Thursday 17 July 2014

நல்லதல்ல

பாலன் வீட்டில் கணிப்பொறியை நோண்டிக்கொண்டு இருந்தான். அப்போது யாரோ வீட்டு கதவை தட்டும் சத்தம் கேட்டது. கதவை திறந்து பார்த்தபோது வீட்டு வாசலில் அஷோக் வந்து நின்றான்.
“வா மச்சி, உள்ள வா ! என்ன திடீர்னு இந்த பக்கம்?”
”ஒன்னும் இல்லடா, சும்மா போர் அடிச்சிது அதான் கடைத்தெருவுக்கு உன் கூட போகலாம்னு வந்தேன் !”
”அப்டியா, ஒரு நிமிஷம் இரு வந்துடுறேன் !!”
இருவரும் புறப்பட்டு வெளியே நடந்து சென்றார்கள். அப்போது, அஷோக் பேச்சை தொடங்கினான்.
“அப்புறம் மச்சி, எவ்ளோ நாள் தான் நீயும் நானும் சேந்து நடக்குறது?”
“ரெண்டு பேருக்கும் காலும், நடக்குறதுக்கு ரோடும் இருக்கிற வரைக்கும்!”
“டேய், அத கேக்கல டா ! உன் கல்யாணம் எப்ப?”
“உனக்கு தெரியாததா மச்சி ! எனக்கு தான் சின்ன வயசுல இருந்தே கல்யாணம்னா பிடிக்காதுல்ல !”
“மனுஷன் தனிமையாக இருப்பது நல்லதல்லனு பைலில்ல இருக்குல்ல !”
“அப்டியா? சரி உன் கல்யாணம் எப்ப?”
“எங்க மச்சி, ஒன்னும் செட் ஆக மாட்டேங்குது !”
”மேட்ரிமோனி வெப்சைட்ல பதிவு பண்ணி வெச்சிருந்தியே, என்னாச்சு?”
“பாத்துகிட்டே இருக்கேன், ஒன்னும் வேலைக்கு ஆகல !”
“ஏன் டா மொதல்ல ஏதோ ஒரு பொண்ணு பாத்ததா சொன்னியே !”
“அந்த பொண்ணா? அது வட மாநிலத்தில ஊழியம் பண்ணனுமாம், எனக்கு கர்த்தர் அந்த பாரத்த கொடுக்கல, உள்ளூர்லயே வாலிபர்கள் ஊழியம் செய்யனும்ங்கிறது தான் என்னோட வாஞ்ச”
”சரி, அடுத்ததா ஒரு பீஈ படிச்ச பொண்ணு ஒன்னு பாத்தியே !”
“மாசம் 1 லட்சம் ரூபா சம்பாதிக்கனுமாம், நம்ம 20 ஆயிரம் ரூபா சம்பாதிக்கிறதுக்குள்ளயே நாக்கு தள்ளுது!”
“அடுத்ததா ஏதோ பாஸ்டர் பொண்ணு ஒன்னு பாத்தியே !”
“அந்நிய பாஷைல பேசணுமாம், எனக்கு கர்த்தர் அந்த வரத்த கொடுக்கலையே, நான் என்ன பண்றது !”
“சரி, அப்பா அம்மா வேற எந்த பொண்ணையும் தேடலையா?”
“தேடுனாங்க, போற எடத்துல எல்லாம், பையனுக்கு ஒரு ஆபீஸ் வெச்சி தாங்க, பொண்ணுக்கு சொந்த வீடு இருக்கா, அப்டி இப்டினு கேட்டாங்க !, இதேல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு, நீங்க ஒன்னும் பாக்க வேண்டாம்னு சொல்லிட்டேன் !”
“சரி, லவ் பண்ணியாவது பாரேன், அதுக்கும் முயற்சி பண்ணேன் !”
“பார்றா? அப்புறம் அஷோக்கு பெரிய ஆளு டா, என்னா சொல்லுது உன் ஆளு?”
“என்னைய பிடிக்கலைனு சொல்லுது !”
“என்னடா சொல்ற, என்னாச்சி?”
“6 மாசமா மச்சி, அந்த பொண்ணுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காதுன்னு? கேட்டு ஒவ்வொரு விஷயமா நான் மாத்திகிட்டேன், அவங்க அப்பா கிட்ட கேட்டா, அவர் முடியாதுன்னு சொல்லிட்டார்”
“அவருக்கு பிடிக்கலைனா என்ன? பொண்ணு உறுதியா இருந்தா சொல்லு, நான் முடிச்சி வெக்கிறேன்!”
“இல்ல மச்சி, உண்மையில பொண்ணுக்கு தான் என்னைய பிடிக்கல, அத முன்னாடியே சொல்லி இருந்தா, நான் டீசண்டா கங்க்ராஜுலேஷன் சொல்லிட்டு வந்திருப்பேன், ஆனா நான் அனுப்புன மெய்ல், மெசேஜ் எதுக்குமே ரிப்ளை பண்ணாம இருந்ததால, கடுப்புல திட்டினேன், உண்மையில அவளுக்கு தான் என்னைய பிடிக்கலைனு சொன்னா!”
“சரி விடு மச்சி, இவ இல்லைனா இன்னொரு பொண்ணு”
“வருத்தம் எல்லாம் ஒன்னும் இல்ல, மொதல்லயே நேரா சொல்லி இருந்தா இவ்ளோ முயற்சி எடுத்திருக்க வேண்டாம், குறைந்தபட்சமா நண்பர்களாவாவது பிரிஞ்சிருக்கலாம், இப்ப பாரு, எதிரி மாதிரி சண்ட போட வேண்டியதா போச்சு !”
“விடு மச்சி, பொண்ணுங்க மனசு ரொம்ப ஆழம், அதுல என்ன இருக்குதுன்னு ஒன்னுமே புரியாது !”
இவர்கள் பேசிக்கொண்டு இருந்தபோது, ஏதோ பாஸ்டர் ஜஸ்டின் வீட்டில் ஒரே சத்தமாக இருந்தது.
இருவரும் அந்த வீட்டின் அருகே சென்றார்கள், பாஸ்டர் ஜஸ்டினும் அவருடைய மனைவியும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு ஒரே ரகலை, ஊரே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தது.
“நல்ல வேல, கல்யாணத்துக்கு முன்னாடி பிடிக்கலைனு சொன்னா !”
“மச்சி, நீ எனக்கு ஒரு வசனம் சொன்னல்ல, நான் ஒன்னு சொல்றேன், கல்யாணத்துக்கு ரொம்ப முக்கியம் அன்பு, அது இல்லைனா, கல்யாணமே தேவை இல்ல ! கல்யாணம் பண்ணிக்கோனு அட்வைஸ் பண்றவங்க எத்தன பேர் சமாதானமா வாழ்றாங்கனு பாரு, சமாதானமா வாழ முடியாதவங்க அட்வைச எடுத்துக்க வேண்டிய அவசியம் இல்ல !”
“அப்டினா பைபில் வசனம் தப்புனு சொல்றியா?”
“அடடே ! இல்ல மச்சி , சரி நானும் ஒரு வசனம் சொல்றேன், சண்டைக்காரியோடே தங்குவதை பார்க்கிலும், வீட்டில் ஒரு மூலையில் தங்குவதே நலம் !”

- சாம் 7