ஆன்லைனில் தமிழ் டைப் செய்யுங்கள்

Monday 30 June 2014

3 + 5

நான் பாப்பு ரெண்டு பேருமே கல்யாணத்துக்கு முன்னாடில இருந்தே கடவுள் நம்பிக்க இல்லாதவங்க தானுங்க. ஆனா பாப்பு தங்கம் இந்த இயேசு கடவுள வணங்க ஆரம்பிச்சிட்டா. கொஞ்ச நாள் நானும் சொல்லி பாத்தேனுங்க. அப்புறம் நேத்து ராத்திரி ரொம்ப கடுப்பாகி ஒரு அப்பு அப்பிட்டேனுங்க. அதுல அவ கண்ணத்துல பாத்தீங்கன்னா மூணு விரல் பதிஞ்சி போச்சுங்க !
இன்னிக்கி காலைல பாருங்க, ஏதோ ஒரு பேப்பர கையில வெச்சிகிட்டு, வாய்ல என்னமோ மொனகிக்கிட்டு இருந்தாலுங்க. அவ ஏடிஎம்ல பணம் எடுக்க கிளம்பின உடனே நான் அந்த பேப்பர்ல என்ன தான் எழுதி இருக்குதுன்னு பாக்கலாம்னு பாத்தேனுங்க. அவ எங்க வீட்டு பக்கத்துல இருக்கிற பஸ் ஸ்டாப்ப கடந்து போறத ஜன்னல்ல பாத்துட்டு, ஒடனே திரும்பி வந்து என்ன தான் அந்த பேப்பர்ல இருக்குன்னு பாக்க வந்தேனுங்க.

பாத்தா, எங்க பக்கத்து வீட்டுக்காரங்க, எதித்த வீட்டுக்காரங்க, காய்கறி விக்கிற பொம்பளன்னு, தெரிஞ்சவங்க எல்லாரோட பேரும், அவங்களோட தேவைகளும் இருந்துச்சிங்க. இத பாத்து எதுக்கு மொனகிக்குட்டு கண்ணீர் விட்டானு தெரிலைங்க. சரின்னு டிவி பாக்க ஆரம்பிச்சா, நேத்து எவனோ ஒருத்தன் ஏடிஎம் உள்ள பணம் எடுக்க போன பொம்பளய கத்திய காட்டி பணம் புடுங்கிட்டு, அவளையும் வெட்டிபோட்டுட்டு வர்றத காட்டுனாங்கங்க ! எனக்கு பகீர்னு இருந்துச்சிங்க !
பாப்பு பஸ் ஸ்டாப்ப கடந்து போனப்ப அவன மாதிரி யாரையோ பாத்த ஒரு நியாபம் வந்துச்சிங்க, உடனே நான் பைக்க எடுத்துகிட்டு ஏடிஎம் கிட்ட போய்டேனுங்க !
நான் நெனச்ச மாதிரியே ஏடிஎம் சட்டர் மூடுறத பாத்தேனுங்க ! வேகமா போய் அந்த சட்டர தூக்கி விட்டுட்டு பாத்தேனுங்க !
ஆத்தாடி ஆத்தா ! அந்த திருட்டுப்பய ஒரு
பக்கம் விழுந்து கிடந்தான், அவன் கத்தி ஒரு பக்கம் கெடந்துச்சி, உடனே அத எடுத்து அவன மிரட்டி கட்டிபோட்டுட்டு, போலீச வரவழைச்சிட்டோம் !
அன்னக்கிலேருந்து என் பாப்புவ, நான் வாடி போடின்னு கூட கூப்புடுறது இல்லிங்க, வாங்க போங்கனு தாங்க கூப்புடுறேன் !
ஏங்க ஒரு மொரட்டு திருடன் கண்ணத்திலயே அஞ்சி விரலும் பதியிறமாதிரி அடிச்சிருந்தா ! நான் என்னத்துக்குங்க ஆவேன்.....

- சாம் 7 

No comments:

Post a Comment