ஆன்லைனில் தமிழ் டைப் செய்யுங்கள்

Tuesday 25 February 2014

அவசரம் !


இரவு மணி 8. போதகர்.பன்னீர்செல்வம் வீட்டின் காலிங் பெல்லை யாரோ அழுத்தினார்கள். கதவை திறந்தபோது, ஜாய்சின் தந்தை பாலன் மற்றும் சர்ச் செயலாளர் டேவிட் நின்றுகொண்டு இருந்தார்கள்.
பன்னீர்செல்வம் : வாங்க ! வாங்க ! என்ன இந்த நேரம்?
பாலன் : நல்ல விஷயம் தானுங்க ! நம்ம பாப்பாவுக்கு கல்யாணம் நிச்சயம் பண்னி இருக்கோம் !
பன்னீர்செல்வம் : ரொம்ப சந்தோஷம், உள்ள வந்து பேசலாமே !
அனைவரும் உள்ளே அமர்ந்து பேசத்தொடங்கினார்கள்...
பாலன் : மாப்பிள்ள ஒரு வாரத்துல அமெரிக்கா போறாரு, அதுக்குள்ள கல்யாணம் பண்ணனும் !
பன்னீர்செல்வம் : என்னய்யா இப்டி சொல்றீங்க? 3 அறிக்கை வாசிக்கனுமே ! சரி மாப்பிள்ள எந்த சர்ச்?
டேவிட் : அது வந்துங்கையா, அவரு கிறிஸ்டியன் இல்ல, ஆனா கல்யாணத்துக்காக மாறிக்கிறேன்னு சொல்றாரு, நீங்க தான் பாத்து ஏதாவது செய்யனும்
பன்னீர்செல்வம் : என்ன நெனச்சிகிட்டு நீங்க இப்டி பேசுறீங்க? குறைந்தபட்சம் 6 மாசம் தொடர்ந்து சர்சுக்கு வந்திருக்கனும், ஞானஸ்நானம் வாங்கி இருக்கனும், கல்யாணத்துக்கு முன்னாடி 3 வாரமாவது மேரேஜ் கவுன்சிலிங்ல பங்கெடுக்கனும், இல்ல சார் இதெல்லாம் நடக்காது
டேவிட் : நீங்க சொல்றது புரியுதுயா, 6 மாசம் சந்தா சர்சுக்கு குடுத்திடுறொம், உங்களுக்கும் தேவையானத பாத்து செஞ்சிடுறோம், நீங்க தான் இத எப்டியாவது செய்யணும்
பன்னீர்செல்வம் : நீங்க நெனக்கிற மாதிரி ஆளு நான் இல்ல, இந்த மாதிரி காரியத்துக்கு எல்லாம் நீங்க வேற ஆள பாருங்க !
பாலன் : ஐயா...
பன்னீர்செல்வம் : இல்லையா...நீங்க கிளம்புங்க !
பாலன், டேவிட் இருவரும் வெளியே வந்தனர்.
“தானும் பிழைக்கமாட்டேன், மத்தவனையும் பிழைக்க விட மாட்டேன்னு இந்த ஆளு ரொம்ப தான் அலுத்துக்கிறாரு ! மாப்பிள்ள வெளிநாட்ல வேல பாக்குறாரு, மாசம் 2 லட்சம் ரூபா சம்பாதிக்கிறாரு, இந்த மாதிரி வரன் கெடைக்குமாய்யா, நீ வேற யாராவது நல்ல பாஸ்டரா பாரு, வேற சர்ச்ல நாம கல்யாணத்த நடத்துவோம்” என்று சீறினார் பாலன்
அவர்களுடைய திட்டப்படியே வேறு ஒரு போதகர் இவர்களுடைய கோரிக்கைக்கு இணங்கி திருமணத்தை நடத்தி வைத்தார்.
திருமணம் முடிந்து அடுத்த நாள் காலை 7 மணி. யாரோ வீட்டு கதவை தட்டினார்கள். மாப்பிள்ளை வெளியே சென்று கதவை திறந்தார். முன்னே முறுக்கு மீசையுடன் இன்ஸ்பெக்டர் துரை நின்றுகொண்டு இருந்தார்,
“இப்ப எந்த பேரு சொல்லி டா கல்யாணம் பண்ணியிருக்க !” என்று மிரட்டினார்
ஜாய்ஸ் வேகமாக வந்து, “என் புருஷன் என்ன பண்ணாரு? அவரை ஏன் இழுத்துகிட்டு போறீங்க?”
இன்ஸ்பெக்டர் துரை “இவன் உனக்கு மட்டுமா புருஷன்? வெளிய நிக்குது பாரு அந்த பொண்ணுக்கும் தான் புருஷன், இன்னும் நெறய பேருக்கு புருஷன், போம்மா வேலைய பாத்துகிட்டு” என்று கூறி அவனை தரதரவென இழுத்துக்கொண்டு சென்றார்.

ஒரு வாரத்திற்கு பிறகு...
போதகர் பன்னீர்செல்வத்திடம் சபையின் செக்ஸ்டன், ”ஐயா 2 மாசத்துக்கு அப்புறம் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணும் மாப்பிள்ளையும் கவுன்சிலிங்கு வந்திருக்காங்க” என்றார்.
போதகர் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று, “வணக்கம் ! ஜெபம் பண்ணி ஆரம்பிச்சிருலாமா ?! ஜான் நீயே பிரேயர் பண்ணுப்பா !”
ஜான் : , நானா? இல்ல நீயே பண்ணு (சங்கீதாவிடம் கையை நீட்டினான்)
சங்கீதா : அச்சச்சோ, எனக்கு தெரியாது, நீங்களே பண்ணுங்க !
ஜான் : ஐயா ! நீங்களே பிரேயர் பண்ணி தொடங்கி வையுங்க, ஒரு 15 நிமிஷத்தில முடிச்சிருங்க, வேற ஒரு முக்கியமான வேல இருக்கு...

வரைபடம் & கதை எழுதியவர் : ஜெயசீலன் சாமுவேல்

No comments:

Post a Comment